C.T.B- பஸ்ஸில் டீசல் திருட முயன்றவர் கைது

0
282

பஸ்ஸில் டீசல் திருட முயன்றவர் இன்று ஞயிற்றுக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பசறையிலிருந்து மாத்தறைக்கு செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸிலே இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கைதான நபர் அப்பகுதியில் உள்ள தனியார் பஸ் ஒன்றில் நடத்துனராக கடமை புரிபவர் என தெரிய வருகிறது. இவர் டீசல் திருட முற்பட்ட வேளையில் பஸ் தரிப்பிடத்தின் பாதுகாவலரால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை இன்றைய தினம் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்காக நடவடிக்கைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பதுளை நிருபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here