‘Kish விவேகன்ஸ் ப்றீமியர்லீக்  2024’ கிரிக்கட்தொடரின் சம்பியன் பட்டம் : தெமட்டகொடை நைட்ரைடர்ஸ் வசம்

0
105

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் பழையமாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த  ‘Kish விவேகன்ஸ்ப்றீமியர்லீக் 2024’ கிரிக்கட் சம்பியன் கிண்ணத்தை தெமட்டகொடை நைட்ரைடர்ஸ்  27 ஓட்டங்களால் தம்மை எதிர்த்து போட்டியிட்டு எலக்கந்த ஜேடிபோய்ஸ் அணியை வீழ்த்தி கிண்ணத்தை தம்வசப்படுத்தியது.

கொழும்பு முவர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அணிக்கு அறுவர் கொண்ட மென்பந்து கிரிக்கட்தொடரில் மொத்தமாக நான்கு குழுக்களின் கீழ் 21 அணிகள் கலந்துகொண்டன. குழுநிலைப்போட்டிகள், கால்இறுதி, அரை இறுதி, மாபெரும் இறுதிப்போட்டி என மொத்தமாக 52 போட்டிகள் நடைபெற்றன.

இறுதிப்போட்டியில் எம்.பிரதீப் தலைமையிலான எலக்கந்த ஜேடிபோய்ஸ் அணியில்ஆர்பிரணவன், ஆர். ஜெசிந்தன், எஸ்.ஹரிஹரன், டி. விக்னேஸ், கே.சுலக்ஷன் ஆகியோரும்யூ. வாகீசன் தலைமையிலான தெமட்டகொடை நைட்ரைடர்ஸ் அணியில்ஆர். வேலுசாமி, கே.பிரசாந்தன், ஜே.கிரிஷான், எஸ்.டிலக்ஸன் வி.சஞ்ஜீவன் ஆகிய வீரர்களும் களமிறங்கினர்.

இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தெமட்டகொடை நைட்ரைடர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட  ஐந்து ஓவர்களில் இரண்டு விக்கட்டுகளை இழந்து 67 ஒட்டங்களை பெற்றதுடன் ஆர். வேலுசாமி 25 ஓட்டங்களையும், வி.சஞ்ஜீவன் ஆட்டமிழக்காமல் 12 ஓட்டங்களையும் தமது அணிக்கு பெற்றுக்கொடுத்ததுடன் எலக்கந்த ஜேடிபோய்ஸ் சார்பாக பந்துவீச்சில் டி.  விக்னேஸ் ஆறு ஓட்டங்களுக்குஒருவிக்கட்டை வீழ்த்தினார்.

68 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய எலக்கந்த ஜேடிபோய்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டி.விக்னேஸ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அவ்வணியின் துடுப்பாட்ட வீரர்கள் போட்டியை தம்வசப்படுத்த முனைந்த போதிலும் தெமட்டகொடை நைட்ரைடர்ஸ் பந்துவீச்சாளர்கள் சிறப்பான முறையில்பந்து வீசி போட்டியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

துடுப்பாட்டத்தில் ஆர்பிரணவன் மாத்திரம் தனிநபராக போராடி ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். அவ்வணி நிர்ணயிக்கப்பட்ட ஐந்து ஓவர்களில் 3 விக்கட்டுகளை இழந்து 40 ஓட்டங்களை பெற்று 27 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

தெமட்டகொடை நைட்ரைடர்ஸ் சார்பாக எஸ்.டிலக்ஸன், யூ. வாகீசன் ஆகியோர் தலா ஒருவிக்கட்டினை வீழ்த்தினர்.

இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகனாகவும், தொடரின் சிறந்த வீரராகவும் தெமட்டகொடை நைட்ரைடர்ஸ் அணியின் ஆர். வேலுசாமி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். சிறந்த துடுப்பாட்ட வீரருக்கானவிருது எலக்கந்த ஜேடிபோய்ஸ் அணியின் டி. விக்னேஸிற்கு வழங்கப்பட்டது. சிறந்தபந்து வீச்சாளருக்கான விருதுரட்ணம் செலஞ்சர்ஸ் அணியின் அஜித்துக்கு வழங்கப்பட்டது.

மூன்றாம் இடத்திற்கான போட்டியில் ரட்ணம் செலஞ்சர்ஸ்போய்ஸ்மற்றும் வத்தளை சாணக்கியன் அணிகள் மோதியதுடன் அப்போட்டியில் ரட்ணம் செலஞ்சர்ஸ்போய்ஸ் அணிவெற்றி பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

பிரதமவிருந்தினராக ஈஸ்வரன் பிரதர்ஸ் தலைவர் கணேஷன் தெய்வநாயகம் கலந்துகொண்டதுடன் தெமட்டகொடை நைட்ரைடர்ஸ் அணிக்கு சம்பியன் கிண்ணத்தையும் ஒரு இலட்சம் ரூபா பணப்பரிசையும் வழங்கினார். இரண்டாம் இடத்தை பெற்ற எலக்கந்த ஜேடி போய்ஸ் அணிக்கு கிண்ணமும் 50 ஆயிரம் பணப்பரிசும் வழங்கப்பட்டது.

சிறப்பு விருந்தினர்களாக கிஷ் நிறுவனத்தின் அதிகாரிகள், கல்லூரியின் பழையமாணவர்,  எஸ். ஸ்ரீகஜன், மாஸ்டர் மெரைனர்கெப்டன்எஸ். மணி வண்ணன் ஆகியோரும் கலந்துசிறப்பித்தனர். இது தவிர கல்லூரிஅதிபர் மூ.மூவேந்தன், பழைய மாணவர்சங்க உபதலைவர் மீனாட்சிசுந்தரம் ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பேனா சுரேஸ்குமார்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here