Update news- தூக்கி வீசப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

0
230

குடியிருப்புத் தொகுதியின் மூன்றாம் மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நிலையில், கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்களுக்கான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளது.

படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை மாமா ஜன்னல் வழியாக வீசியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேக நபர் குழந்தையின் தாயின் சகோதரர் என அடையாளம் காணப்பட்டு மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும், கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

https://news-in-lanka-3.local/மூன்றாவது-மாடியில்-இருந்/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here