அரசியலை விட்டு வெளியேறும் பஸில்

0
259

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்ச, தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகி இந்த வார இறுதியில் அமெரிக்கா செல்லவுள்ளதாக தெரிய வருகின்றது.

பசில் ராஜபக்ச நாளை வியாழக்கிழமை தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகி இந்த வார இறுதியில் அவர் அமெரிக்கா செல்லவுள்ளதாகவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை மறுசீரமைப்பதற்காக முழு நேர பணிக்கு பின்னர் திரும்புவார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவரது பதவி விலகல் மூலம் அரசமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் தற்போது கட்சிகளுக்குள் நிலவும் குழுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here