அரச வங்கியில் 6 கோடி மோசடி 62 வயது பெண்ணுக்கு விளக்கமறியல்

0
327

அரச வங்கியில் 6 கோடியே 83 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவையமோசடி செய்வதற்காக ஒத்துழைப்பு வழங்கியதாக்க  கைது செய்யப்பட்ட பெண் 62 வயதுடைய பெண்ணை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதவது,

அரச வங்கியில் 6 கோடியே 83 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவை மோசடி செய்வதற்காக ஒத்துழைப்பு வழங்கிய  பெண்ணொருவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்தனர்.

கடவத்தை அரச வங்கியொன்றில் போலி ஆவணங்களை வெவ்வேறு நபர்களை போன்று சமர்ப்பித்து 48 தனிநபர் கடன்கள் பெறப்பட்டு மோசடி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய வங்கி ஊழியரான மற்றுமொரு பெண் உயிரிழந்துள்ளார்.​

மோசடிக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் குறித்த வங்கியின் வங்கி கடன் பிரிவில் சேவைபுரிந்து ஓய்வு பெற்ற உதவி பொதுமுகாமையாளர் என்பதுடன் அவர்  கடவத்தையை சேர்ந்தவர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here