அலரிமாளிகைக்கு அருகிலுள்ள ‘நோ டீல் கம’ அகற்றம்

0
205

கொழும்பில் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள போராட்ட தளத்தை அகற்றுவதற்கு அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளனர்.

2022 ஆம் ஆண்டு மே மாதம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதை அடுத்து, எதிர்ப்பாளர்களால் ‘நோ-டீல் காமா’ அமைக்கப்பட்டது. மே 09 அமைதியின்மையின் பின்னர் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அவர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றவுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் அலரி மாளிகைக்கு வெளியே ‘நோ-டீல் கம’ போராட்ட தளத்தை அமைத்தனர்.

இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இன்று பதவிப்பிரமாணம் செய்து சில மணித்தியாலங்களுக்கு பின்னரே போராட்டம் நடத்தும் இடம் அகற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here