அவுஸ்திரேலியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர்கள்

0
179

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்த 15 இலங்கையர்கள் அங்கிருந்து  மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட குறித்த 15 பேரும் இன்று     வியாழக்கிழமை அதிகாலை கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்ததாகதெரிய வருகிறது.

இவ்வாறு  நாடு கடத்தப்பட்ட அனைவரும் நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 20 தொடக்கம் 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என விமான நிலைய தகவல்கள் தெரிவித்துள்ளன.

19 நாட்களுக்கு முன்னர், குறித்த 15 பேரும் மீன்பிடி படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு பயணித்துள்ளனர்.

குறித்த 15 பேரும் இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகள் ஊடாக  குடிவரவு- குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here