ஆகஸ்ட் 15 வரை நீடிப்பு

0
452

2023ஆம் ஆண்டு அரசாங்க பாடசாலைகளில் தரம் 01 இற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் ஓகஸ்ட் 15 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டில் அரசாங்க பாடசாலைகளில் தரம் 01 இற்கு மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் மற்றும் வழிகாட்டல்களை கல்வி அமைச்சு அண்மையில் வெளியிட்டிருந்ததோடு, அதன் முடிவுத் திகதி ஜூலை 16ஆம் திகதி என ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக பெற்றோரின் வேண்டுகோளுக்கிணங்க அதன் விண்ணப்பத் இறுதித் திகதி ஓகஸ்ட் 01ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டதோடு, பின்னர் மீண்டும் ஓகஸ்ட் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here