ஆட்டோவில் வைத்து 14வயது மாணவி துஸ்பிரயோகம்

0
415

முச்சக்கர வண்டியில் வைத்து 14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் 17 வயது மாணவன் காலி மாவட்டத்தின் போத்தல பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அக்மீமன பகுதியைச் சேர்ந்த சிறுமி, பத்தேகம பகுதியைச் சேர்ந்த கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் காதல் தொடர்பைக் கொண்டுள்ளார். இவ்வாறான நிலையில் தான் வகுப்புக்குச் செல்வதாக பெற்றோரிடம் கூறிய சிறுமி, சந்தேக நபரான காதலனுடன் வீட்டை விட்டு முச்சக்கர வண்டியில் சென்றுள்ளார்.

இதன்போது போத்தல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் சந்தேக நபரான மாணவன் முச்சக்கர வண்டியில் வைத்து சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமி வைத்திய பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரின் காதலன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here