ஆயிஷா படுகொலை ; நகக் கீறல்களுடன் நபரொருவர் கைது

0
277

உடலின் பல பாகங்களில் நகக் கீறல்களுடன் அட்டுலுகம சிறுமி ஆயிஷா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

குறித்த நபரின் வீட்டின் படுக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சேறும் சகதியுமான சாரம் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், சிறுமி காணாமல் போன தினமான காலை 10.15 மணியளவில் சிறுமி பயணித்த வீதியில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் இருந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் மீது சில மாதங்களுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here