இன்று நள்ளிரவு முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஆரம்ப கட்டணமாக 34 ரூபா அறவிடப்படவுள்ளதாக இலங்கை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சாதாரண பஸ் பயணச்சீட்டு கட்டணம் 11.1 சதவீதத்தால் குறைக்கப்படவுள்ளது.
இப்புதிய கட்டணத்தை செயற்படுத்தாத பஸ் சேவையாளர்கள் தொடர்பில் பொது பயணிகள் 1954 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக முறைப்பாட்டை முன்வைக்கலாம் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.