இன்று முதல் மின்வெட்டு நேரங்களில் மாற்றம்

0
245

மாணவர்களின் நலன் கருதி ஒன்லைன் வகுப்புக்களை நடத்து வதற்காக மினவெட்டு நேரத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைவாக, நண்பகல் 12.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை 2 1⁄2 மணி நேர மின்வெட்டு அமுல்ப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு வர்த்தக நகர வலயத்திற்கு காலை 6.00 மணி முதல் மு.ப. 8.30 மணி வரையில் 2 1⁄2 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

நாடளாவிய ரீதியில் பெரும்பாலான பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதால், கல்வி அமைச்சினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க, ஒன்லைன் கற்றல் நடவடிக்கையின் பொருட்டு, பாடசாலை இடம்பெறும் வேளைகளில் முற்பகல் 7.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை மின்வெட்டை அமுல்படுத்தாதிருக்க தீர்மானித்துள்ளதாக, ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here