இன்றைய காலநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

0
186

நாடளாவிய ரீதியில் இன்று வெள்ளிக்கிழமைக்கான கால நிலையை வளிமண்டலவியல் திணைக்களம அறிவித்துள்ளது.

அதற்கமைய, சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, களுத்துறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, வடமேல் மாகாணத்திலும் கம்பஹா, கொழும்பு, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடையிடையே மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here