இன்றைய ராசி பலன் – 04.09.2022

0
248

மேஷம் : அசுவினி: அமைதி காக்க வேண்டிய நாள். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம்.
பரணி: சொத்து பிரச்னையால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். குடும்பத்தினரின் ஆலோசனை நன்மை தரும்.
கார்த்திகை 1: உறவுகளால் சில சங்கடங்களுக்கு ஆளாவீர்கள். வெளியூர் பயணத்தில் கவனம் தேவைப்படும்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தினருடன் கோயிலுக்கு செல்வீர்கள்.
ரோகிணி: சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். அக்கம் பக்கத்தினர் ஆதரவு உண்டாகும்.
மிருகசீரிடம் 1, 2: விஐபிகளின் ஆதரவுடன் உங்களுடைய செயல்களில் வெற்றி காண்பீர்கள்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: குடும்ப பிரச்னைகளைத் தீர்த்து வைப்பீர்கள். எதிரிகள் உங்களிடம் சரணடைவர்.
திருவாதிரை: சொத்து விஷயத்தில் இழுபறியாக இருந்த ஒரு விவகாரம் இன்று முடிவிற்கு வரும்.
புனர்பூசம் 1, 2, 3: வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றமான நிலை உண்டாகும்

கடகம்: புனர்பூசம் 4: பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த முயற்சியில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த வரவு உண்டு.
பூசம்: உங்கள் உதவியை எதிர்பார்த்து உறவினர்கள் வருவார்கள். யோகமான நாள்.
ஆயில்யம்: நீண்ட நாளாக திட்டமிட்டிருந்த ஒரு வேலையை, பிறரது உதவியுடன் இன்று நிறைவேற்றுவீர்கள்.

சிம்மம்: மகம்: இன்று எதிர்பாராத பயணம் உண்டாகும் என்றாலும், அதனால் லாப நிலையை அடைவீர்கள்.
பூரம்: சந்திக்க நினைத்தவர்களை இன்று சந்தித்து மகிழ்வீர்கள். நண்பர்களிடம் ஏற்பட்ட பிரச்னை தீரும்.
உத்திரம் 1: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளை இன்று சரி செய்வீர்கள்.

கன்னி: உத்திரம் 2, 3, 4: இன்று தைரியமாக ஒரு முடிவை எடுப்பீர்கள். வீடு கட்டும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
அஸ்தம்: பெற்றோர் வழியில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உங்களுடைய திறமை வெளிப்படும்.
சித்திரை 1, 2: சுற்றி இருப்பவர்களில் நல்லவர் யார் கெட்டவர் யார் என்பதை தெரிந்து கொள்வீர்கள்.

துலாம்: சித்திரை 3, 4: இழுபறியாக இருந்த வேலை இன்று முடியும். தம்பதி இடையே ஒற்றுமை கூடும்.
சுவாதி: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உறவினர் உங்கள் வீடு தேடி வருவார்கள்.
விசாகம் 1, 2, 3: கூட்டுத் தொழில் தொடங்கும் முயற்சி இன்று நிறைவேறும்.

விருச்சிகம்: விசாகம் 4: எளிதாக முடிய வேண்டிய வேலைகளும் இழுபறியாகும். மனக்குழப்பம் அதிகரிக்கும்.
அனுஷம்: உங்களது செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். யோசித்து செயல்பட வேண்டிய நாள்.
கேட்டை: பிறரது விஷயத்தில் தலையிட வேண்டாம். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும்.

னுசு: மூலம்: அலைச்சல் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் மனஸ்தாபம் ஏற்படும்.
பூராடம்: மறைமுக எதிரிகளால் தொல்லை உண்டாகும். எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் இழுபறியாகும்.
உத்திராடம் 1: வியாபாரத்தில் வேலையாட்களிடம் உங்கள் கோபத்தை வெளிப்படுத்த வேண்டாம்.

மகரம்: உத்திராடம் 2, 3, 4: திட்டமிட்டு செயல்படுவீர்கள். குல தெய்வ வழிபாடு நன்மை தரும்.
திருவோணம்: உங்களுக்கு வர வேண்டிய பணம் வீடு தேடி வரும். உங்கள் முயற்சிகள் வெற்றியாகும்.
அவிட்டம் 1, 2: குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நினைத்ததை முடிப்பீர்கள்.

கும்பம்: அவிட்டம் 3, 4: வியாபாரத்தில் புதிய முறைகளை கையாள்வீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும்.
சதயம்: நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். பிறரது நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: வாழ்க்கைத் துணையின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி பாராட்டு பெறுவீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here