இராணுவத்தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றார்

0
235

இராணுவத்தின் 24ஆவது தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகே தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இன்று புதன்கிழமை முதல் லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

மாத்தளை விஜய கல்லூரியில் கல்வி கற்ற விக்கும் லியனகே, 1986ஆம் ஆண்டு ஒக்டோபர் 27ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் கெடட் அதிகாரியாக இணைந்தார். விக்கும் லியனகே, தியத்தலாவ இலங்கை இராணுவ கல்விக் கல்லூரி மற்றும் பாகிஸ்தான் இராணுவ அகடமி ஆகியவற்றிலிருந்து தனது அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்று, இரண்டாவது லுதினனாக கஜபா படைப் பிரிவுக்கு நியமிக்கப்பட்டார்.

விக்கும் லியனகே, தனது 35 வருட புகழ்பெற்ற இராணுவப் பணியின் போது, 4ஆவது கஜபா படைப்பிரிவின் கட்டளை அதிகாரி, படையணி கட்டளை அதிகாரி, கட்டளை அதிகாரி, பலசேனா, சேனாங்க, பாதுகாப்புப் படை கட்டளை பதவி உள்ளிட்ட பதவி நிலை பதவிகள் மற்றும் பல்வேறு ஆலோசகர் பதவிகளையும் வகித்துள்ளார்.

அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பாதுகாப்பு மற்றும் தொழில் பயிற்சி பாடநெறிகளைத் தொடர்ந்துள்ளார்.

லியனகே மனிதாபிமான நடவடிக்கையின் போது 57 மற்றும் 56ஆவது படையணிகளின் 8ஆவது கஜபா படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக இருந்ததோடு, எல்ரிரிஈ பயங்கரவாதத்திற்கு எதிராக பல்வேறு வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். ரணவிக்ரம, ரணசூர பதக்கம், கிழக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம், வடக்கு மற்றும் கிழக்கு நடவடிக்கை பதக்கம் உள்ளிட்ட பல பதக்கங்களை வென்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here