இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தினர் தலவாக்கலை ஆர்ப்பாட்டம்

0
210

இலங்கை தோட்ட சேவையாளரும் சங்கத்தினரால் இன்று சம்பள உயர்வுக்கோரி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

70 வீத சம்பளவுயர்வுக்கோரி தலவாக்கலை நகரில் இடம்பெற்ற இப்போராட்டத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள மேற்படி சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தலவாக்கலை மல்லியப்பு கோவில் சந்தியில் ஆரம்பமான மேற்படி ஆர்ப்பாட்ட பேரணி தலவாக்கலை நகரை வந்தடைந்தது. 

2019 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தம் நேற்று 30 ஆம் காலாவதியான நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் 70 வீத சம்பள உயர்வையும் கோரியுள்ளனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here