இளம் பிக்குகள் மீது பாலியல் ;  பிரதம பௌத்த குருவுக்கு விளக்கமறியல்

0
389

இளம் பிக்குகள் மீதான  பாலியல்  துஷ்பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பிரதம  பௌத்த மத்குருவை  எதிர்வரும்  23ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம்  கல்முனை  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  விஹாரை ஒன்றில்   வைத்து 3 இளம் பிக்குகள்  பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பிலான வழக்கு  இன்று (16) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் சந்தேக நபரான பௌத்த மதகுருவை  எதிர்வரும் செப்டம்பர்  மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை  நீதிமன்ற நீதிவான்  உத்தரவிட்டார்.

அம்பாறை மாவட்டம் சடயந்தலாவை பகுதி ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 இளம் பிக்குகள்  கல்முனை பகுதி    விஹாரை ஒன்றில்   வைத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர்  பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் ஒன்றின் அடிப்படையில்  13 ஆந் திகதி  கல்முனை சுபத்ரா ராமய  விஹாராதிபதியாக  ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் என்றழைக்கப்படும் பிரதான பௌத்த மதகுரு அம்பாறை மாவட்ட சிறுவர் பெண்கள் விசேட பிரிவினரால் சந்தேகத்தின் அடிப்படையில்  கைது செய்யப்பட்டு கல்முனை  நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் இன்று ஆஜர் படுத்தப்பட்ட நிலையிலேயே இவ்வாறான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here