இ.போ.ச- தனியார் பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து 30 பேர் காயம்

0
276

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இரு பஸ் வண்டிகள் நேருக்கு சேர் மோதி விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்துள்ள சம்பவமொன்று இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு – கண்டி பிரதான வீதியில், மாவனெல்ல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தனியார் பயணிகள் பஸ் ஒன்றும் – இலங்கை இ.போ.ச பஸ் வண்டியும் மோதியே விபத்தக்குள்ளாகியுள்ளது.

தனியார் பயணிகள் பேருந்து, கேகாலையில் இருந்து நுவரெலியா நோக்கிச் சென்று கொண்டிருந்த அதேவேளை, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மாவனெல்லையில் இருந்து கேகாலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போதே இசச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கும் மாவனல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here