உமி அடுப்பினால் தீயில் நாசமான வீடு

0
248

உமி அடுப்பில் , மண்ணெண்ணெயை ஊற்றும் போது ஏற்பட்ட தீயினால் வீட்டில் இருந்த உடைமைகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், குறித்த வீட்டுக்கு அருகில் இருந்த இரு வீடுகளும் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதை தெரிய வருகின்றது.

அம்பாறை-சாய்ந்தமருது-02 ஆம் பிரிவு சாஹிரா கல்லூரி வீதியில் இன்று திங்கட்கிழமை, வீட்டில் மதிய உணவு தயாரித்துக் கொண்டிருந்த போது, திடீரென் இத் தீ விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த கல்முனை மாநகர தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததுடன் விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here