எண்ணெய்க் கிடங்கில் மின்னல் தாக்கியதில் 80 பேர் காயம்

0
371

கியூபாவிலுள்ள எண்ணெய்க் கிடங்கில் மின்னல் தாக்கியதில் 80 பேர் காயமடைந்தனர் மற்றும் 17 பேரின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை. அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

அங்குள்ள மடான்சாஸ் சிட்டி பகுதியில் கடந்த வெளிக்கிழமை இரவு இந்த விபத்து நடந்துள்ளது. இன்னும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர்.

எண்ணெய்க் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க, சர்வதேச நிபுணர்கள் மறும் பல்வேறு உலக நாடுகளிடம் ஆலோசனை களையும் உதவிகளையும் நாடியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

சம்பவத்தன்று ஒரு எண்ணெய் சேமிப்பு கலனில் மின்னல் தாக்கி தீப்பற்றியுள்ளது. இந்த தீ மளமளவென அருகிலிருந்த இன்னொரு எண்ணெய் சேமிப்பு கலனுக்கும் பரவியதால் பெரும் சேதம் எற்பட்டது.

எண்ணெய்க் கிடங்கில் இருந்து சுமார் 100 கி.மீ தூரத்திற்கு புகை பரவியுள்ளது. அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டம் சூழ்ந்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here