மட்டக்களப்பு – வெல்லாவெளி பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களை காட்டு யானைகள் இன்று அதிகாலை வேளையில் சேதமாக்கியுள்ளது.
குறித்த யானை தாக்குதலின் போது எவருக்கும் பாதிப்பு எற்படாத போதும் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வண்டிகளில் இரு வண்டிகள் முழுமையாகவும் ஏனைய வண்டிகள் பகுதி அளவிலும் சேதமாக்கப்பட்டுள்ளது.
![](https://news-in-lanka-3.local/wp-content/uploads/2022/07/WhatsApp-Image-2022-07-29-at-9.55.49-AM.jpeg)