எரிபொருள் வரிசையில் மற்றுமொரு மரணம்

0
231

எரிபொருள்    நிலையத்தில் தமது மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோலை பெற்றுக்கொள்வதற்காக 3 நாட்களாக காத்திருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு லொறியொன்று மோதியதில் இவ்வாறு எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மத்துகமை – அகலவத்தை பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், பதுரலியவை சேர்ந்த 55 வயதான இத்தகொட ஹேவகே ஜகத் என்பவர் உயிரிழந்துள்ளார்.

பதுரலியவில் இருந்து அகலவத்தை நோக்கி பயணித்த லொறியொன்று வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளானதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக அறியக்கூடியதாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here