ஓடும் ரயிலில் உதைத்து தள்ளப்பட்டு பாதுகாப்பு உத்தியோகத்தர் மரணம்

0
370

பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து தள்ளப்பட்ட நிலையில் உயிழந்த சம்பவமொன்று இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

யாழ். நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த புகையிரதத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

ரயிலுக்குள் மது அருந்திக் கொண்டிருந்த சில பயணிகளை மற்ற பயணிகளின் முறைப்பாட்டையடுத்து, புகையிரதத்தில் கடமையாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சித்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பந்தப்பட்ட பயணிகளை பெட்டியிலிருந்து அழைத்துச் செல்லும் நேரத்தில், சந்தேக நபர்களில் ஒருவர் பாதுகாப்பு அதிகாரியை உதைத்துள்ளார், இதனையடுத்தே ஓடும் ரயிலில் இருந்து விழுந்து உயிரிழந்தள்ளதாகத் தெரியவருகிறது.

யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற புகையிரதம் வெயங்கொடையை அண்மித்துச் சென்று கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து, வெயங்கொட பொலிஸார், வதுராவ புகையிரத நிலையத்திலிருந்து 100 மீற்றர் தொலைவில் இருந்து குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் சடலத்தை மீட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் 52 வயதுடைய ஒருத்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவருகிறது. நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவரும் அனுராதபுரத்தைச் சேர்ந்த 23 வயதுடையவர்களுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here