கடனை சமாளிக்க புது முயற்சியில் ஈடுபட்ட விமானப்படை வீரர்

0
474

விடுமுறைக்கு வீடு சென்று திரும்பிய விமானப்படைவீரர் ஒருவர், தன்னை தானே கடத்தி காட்டுப்பகுதியில் கைகள், கால்கள் மற்றும் வாயை கட்டிக்கொண்டு அவஸ்தைப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலம் தெரியவருவதாவது,

ரிதிதென்னை பொலிஸ் சோதனைச் சாவடியில் இருந்து சுமார் 500 மீற்றர் தூரத்தில் செங்கல்வாடி ஒன்றுக்கு அருகில், உள்ளாடையுடன் ஆண்ணொருவர், மரத்தில் கட்டப்பட்டிருந்ததை, சோதனைச் சாவடியில், கடமையிலிருந்த பொலிஸார் கண்டுள்ளனர்.

மட்டக்களப்பு விமானப்படை படை முகாமில் கடமையாற்றும் வலப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய ரத்தினசூரிய முதியன்சலாவே என்பவர் என தெரியவந்தது.

இதனையடுத்து, விசாரணை மேற்கொண்ட போது, விடுமுறைக்காக வீடுச்சென்று, மஹியங்கனையை திரும்பியதாகவும் பின்னர் பொலன்னறுவை பஸ்வண்டியில் பயணித்து செவினப்பிட்டி மட்டக்களப்பு சந்தியை மாலை வந்தடைந்து, அங்கிருந்து மட்டக்களப்பு செல்வதற்காக காத்திருந்தபோது பின்னால் தனியார் வாகனம் ஒன்றில் வந்த இனந்தெரியாதோரால் தனது தலையில் தாக்கி, தன்னுடைய முகத்தை மூடிவிட்டனர் குறித்த இடத்தில் தன்னை கட்டிவைத்து விட்டு சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

‘மரத்தில் முரட்டு அரசியலுக்காக உதவும் கைக்கூலிகள் இப்படித்தான் கொல்லப்படுகின்றார்கள்’ என எழுதப்பட்ட வாசகம் அடங்கிய பதாகையையும் பொலிஸார் க்ணடதையடுத்து உடனடியாக கட்டிவைக்கப்பட்டிருந்த நபரை மீட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

எனினும் குறித்த விமானப்படை வீரரின் உடலில் எவ்விதமான அடிகாயங்களும் இல்லாததை தெரிந்துகொண்டு பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டபோது உண்மை வெளியில் வந்துள்ளது.

அந்த விசாரணையில், குறித்த படைவீரர் கையடக்கத் தொலைபேசியில் விளையாட்டு ஒன்றில் அதிக பணத்தை இழந்துள்ளதாகவும் முகாமில் சக படைவீரர்களிடம் கடனாக பணம் வாங்கி அதனையும் அந்த விளையாட்டில் இழந்ததையடுத்து கடனாளியாகியுள்ளார். எனினும், கடன்காரரிடமிருந்து தப்பிக்கவே இவ்வாறு நாடகமாடினேன் என, அவர் பொலிஸாரிடம் ஒத்துக்கொண்டார்.

அதன்பின்னர் அவர் கைது செய்யப்பட்டார் எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here