கடவுச்சீட்டு வழங்குவதில் புதிய நடவடிக்கை

0
272

மாத்தறை, வவுனியா மற்றும் கண்டி பிராந்திய அலுவலகங்களில் 2022 ஜூலை 04 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, குறிப்பிட்ட பிராந்திய அலுவலகங்களில் ஏற்கனவே திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்துள்ள 100 விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே ஆரம்பத்தில் முன்னுரிமையளிக்கப்படும்.

www.immigration.gov.lk  என்ற இணையத்தளத்தில் ஏற்கனவே பிராந்திய அலுவலகங்களில் சாதாரண சேவைக்காகப் பதிவு செய்தவர்களுக்கு இந்தச் சேவை வழங்கப்படும் .

தலைமை அலுவலகத்தில் ஒரு நாள் சேவைக்காக ஏற்கனவே பதிவு செய்துள்ளவர்கள 0706311711 என்ற எண்ணுக்கு வட்ஸ்அப் ஊடாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here