காது அறுவை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வந்த பெண் கையை இழந்தார்

0
318

செவிலியர் ஒருவரின் அலட்சியத்தில் இளம்பெண் ஒருவரின் கை துண்டான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண்ணுக்கு நவம்பரில் நடக்கவிருந்த திருமணமும் தடை பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

பீகார் மாநிலத்தின்  பாட்னா நகரில்  உள்ள மகாவீர் ஆரோக்கிய சன்ஸ்தானில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

கடந்த ஜூலை 11ம் திகதி காது அறுவை சிகிச்சைக்கு குறித்த வைத்தியசாலைக்கு  வந்த ரேகாவுக்கு நரம்புக்கு பதிலாக தமனியில் ஊசி போடப்பட்டது. இதனால் ரேகாவின் கை மெதுவாக பச்சை நிறமாக மாற ஆரம்பித்தது. ரேகா உடனடியாக கையில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் வலி குறித்து மருத்துவமனையில் புகார் அளித்தார்,

ஆனால் அந்த நேரத்தில் பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கவனம் செலுத்தவில்லை. மாறாக அவரை மருத்துவமனையில் இருந்து வெளியேறுமாறு மிரட்டினர்.

தவறான சிகிச்சையின் காரணமாக ஒரு கையை அவர் இழந்தார். கையை இழந்தது மட்டுமின்றி, நவம்பரில் அவருக்கு நடக்கவிருந்த திருமணமும் நிறுத்தப்பட்டது.

இதனால், அவரது குடும்ப உறுப்பினர்கள் கன்கர்பாக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், காவல் துறை இதனை வழக்குப்பதிவு செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர்கள் தற்போது நியாயம் கேட்டு கோர்ட்டிற்கு சென்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here