காலால் உதைத்த இராணுவ அதிகாரி பணியிலிருந்து இடைநிறுத்தம்

0
314

பொதுமகனொருவரை காலால் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து உதைத்ததாக சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ அதிகாரி பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகேவின் ஆலோசனையின் பிரகாரம், குறித்த இராணுவ அதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நிறைவடையும் வரை அவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தாக்குதலுடன் தொடர்புடைய சிரேஷ்ட அதிகாரியின் நடத்தை தொடர்பான விடயங்களை ஆராய்ந்து, பரிந்துரைகளை வழங்குவதற்காக படைத் தளபதியின் தலைமையில் ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி….

https://news-in-lanka-3.local/பொதுமகனொருவரை-உதைக்கும்/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here