காலிமுகத்திடலில் ஆணொருவரின் சடலம் மீட்பு

0
167

காலி முகத்திடல் கடற்கரையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் இன்று அதிகாலை வேளையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் யாரென அடையாளம் காணப்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலத்தை மீட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை (29) காலி முகத்திடல் கடற்கரையில், கொட்டாவையைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரின சடலமும் கரையொதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here