கென்டெய்னரிலிருந்து சடலம் மீட்பு

0
288

கனரக  கொள்கலன்  ஒன்றுக்குள்ளிருந்து    சடலமொன்றை   இன்று ஞாயிற்றுக்கிழமை மஹகும்புக்கடவல பொலிஸார் மீட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

மேற்படி மாமரத் தோட்டத்தில் பணிபுரிந்த மஹவ பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு மீட்கப்பட்ட சடலத்தின் தலைப் பகுதியில் அடிகாயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த தோட்டத்தின் சடலமொன்று கிடப்பதாக கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

மேற்படி மாமரத் தோட்டத்தில் வேலை செய்யும் மூவர் நேற்றிரவு குறித்த கண்டெய்னருக்குள் இருந்து கொண்டு மது அருந்தியதாகவும், அதன் பின்னர் அவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட  விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

மூவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் அம்மூவரில் ஒருவர் இவ்வாறு அடித்துப் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,

சடலம் நீதிவான் விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here