கொழும்பில் இடம்பெற்ற சர்வதேச யோகா தினம்

0
264

கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய கொன்சுலேட் ஜெனரல் அலுவலகம், ஹம்பாந்தோட்டையில் உள்ள இந்திய கொன்சுலேட் ஜெனரல் அலுவலகம் மற்றும் கண்டியில் உள்ள இந்திய துணை உயர் ஸ்தானிகராலயம் ஆகியவை இணைந்து, 8ஆவது சர்வதேச யோகா தினத்தை கொண்டாடும் முகமாக, இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் இன்று நடாத்தியது.

அதற்கமைய கொழும்பு -07, சுதந்திர சதுக்கத்தில் பிரதான நிகழ்வு இடம்பெற்றது.
‘மனிதத்திற்காக யோகா’ என்ற தொனிப்பொருளின் கீழ் பாரிய பொது நிகழ்வொன்று 21ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் காலை 06.00 மணிமுதல் நடைபெற்றது.

இந்நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரம சிங்க உட்பட அரசியல் வாதிகள், கல்வியாளர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள யோகாசன அமைப்புக்களின் ஆசிரியர்கள் அங்கத்தவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

கொழும்பு இந்திய உயர்ஸ்தானிகராலய ஊடகப்பிரிவு

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here