கொழும்பு நகர பாடசாலைகளுக்கு பூட்டு

0
254

கொழும்பு நகர எல்லைக்கு உட்பட்ட அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளை அடுத்த வாரம் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு இன்று  காலை கல்வி அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இருப்பினும், இணையவழி கற்பித்தலைத் தொடர வாய்ப்பு இருப்பதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள அதிகாரிகளின் கூட்டத்தில் இதுதொடர்பாக மீளாய்வை மேற்கொண்டு அடுத்த வார பாடசாலை கல்வி நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here