கோட்டாவின் பதவி விலகலால் டொலர் மழையில் இலங்கை

0
554

வெளிநாடுகளில் உள்ள இலங்கையைச் சேர்ந்தோர் ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ச விலகிய பின்னர், அதிகாரபூர்வமாக தமது டொலர் வருமானத்தை இலங்கைககு அனுப்ப ஆரம்பித்துள்ளதாகத் தெரியவருகிறது.

கோட்டாபய பதவி விலகும் வரை இலங்கைக்க ஒரு டொலர் கூட அனுப்ப மாட்டோம் என்று முன்னர் அவர்கள் தெரிவித்து இருந்தனர். இதன்படி தற்போது, வெளிநாட்டு பணியாளர்கள் மற்றும் வெளிநாட்டில் வாழும் இலங்கையைச் சேர்ந்த சிங்கள மக்கள் நாட்டில் உள்ள தமது உறவினர்களுக்கு பணம் அனுப்பத் ஆரம்பித்தள்ளனர்.

#Srilankadollarchallenge என முகநூல் பக்கத்தினை உருவாக்கி பணத்தினை அனுப்புமாறு மற்றவர்களையும் ஊக்குவிக்கத் தொடங்கியுள்ளனர். மேலும் அவர்களில் பலர் இலங்கைக்கு டொலர்கள் அனுப்பியதனை உறுதிப்படுத்தும் வகையில் இது தொடர்பான பரிவர்த்தனைகளின் ஒளிப்படங்களை முகநூல் வாயிலாக வெளியிட்டு வருகின்றனர்.

பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றி இலங்கையில் உள்ள வங்கிகள் ஊடாக டொலர்களை அனுப்புமாறும் மற்றவர்களுக்குத் தெரிவித்து வருகின்றனர். எனினும் தற்போது சிறிதளவு பணம் அனுப்புவதாகவும், நாட்டில் அரசியல் சூழல் சுமூகமான பின்னர் உரிய முறையில் பணம் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கின்றனர். போராட்டம் நடத்திய இளையோருக்கும் தமது நன்றிகளை தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here