கோட்டாவை கைது செய்ய கோருகிறார் பிரிட்டன் எம்.பி

0
525

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பிக்க ஐக்கிய இராச்சிய அரசாங்கம் தனது ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படுமாறு பிரித்தானியாவின் லிபரல் டெமாக்ரட் கட்சியின் தலைவர் எட்டேவி கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரித்தானிய பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கையின் நிலை குறித்த அவசர விவாதத்தின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை  மக்களுக்கு ஏற்பட்ட பயங்கரமான  சூழ்நிலைக்கு  ராஜபக்ஸ அரசே காரணம் எனவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார் தலைவர் எட்டேவி. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here