கோழி இறைச்சி வாங்க சென்ற மகள் சடலமாக மீட்பு – தொடரும் விசாரணைகள்

0
287

கோழி இறைச்சி வாங்க சென்ற 9 வயது சிறுமி பண்டாரகம, அட்டுலுகமவில்  அப்பகுதியில் உள்ள சதுப்பு நிலத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ இதனைத் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த பாத்திமா ஆயிஷா எனும் குறித்த சிறுமி நேற்று முன்தினம் 27 ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது வீட்டிலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவிலுள்ள கடையொன்றுக்கு அவரது தாய் கோழி இறைச்சி வாங்குவதற்காக கடைக்கு அனுப்பியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஒரு மணித்தியாலம் ஆகியும் சிறுமி வீடு திரும்பாத நிலையில், அவரை சிறுமியின் தாய் தேடியுள்ளார். இதனைத் தொடர்ந்து குறித்த கோழி இறைச்சிக் கடைக்கு முன்னாலிருந்த CCTV கெமராவை சோதனையிட்டபோது, சிறுமி கடைக்கு வந்து, 10.12 மணிக்கு மீண்டும் திரும்பிச் செல்வது தெரியவந்துள்ளது.

ஆயினும் சிறுமி வீடு திரும்பாத நிலையில், சம்பவம் தொடர்பில் பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து  பாணந்துறை பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் புலனாய்வு அதிகாரிகளும் அவர்களுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் பல கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here