சித்தியடைந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக நிதியுதவி

0
305

க.பொ.த சாதாரண மற்றும்  உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, 99 கல்வி வலயங்களைச் சேர்ந்த 2,970 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள 99 கல்வி வலய அலுவலகங்களில் இருந்து தலா 30 புலமைப்பரிசில் வெற்றியாளர்களை தெரிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு அதிகபட்சமாக 24 மாதங்களுக்கு மாதம் தலா 5,000 ரூபா உதவித்தொகையாக வழங்கப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.

புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் பத்திரிகை விளம்பரங்கள் மூலம் கோரப்படும். இதன்படி, இந்த பொறிமுறை தொடர்பில் அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு உடனடியாக அறிவிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர.சமன் ஏக்கநாயக்க செயலாளருக்கு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here