சீனாவில் கடும் மழை 12 பேர் பலி வானிலை நிலையம் எச்சரிக்கை

0
168

தெற்கு பகுதியில் அமைந்துள்ள பல மாகாணங்களில் கடந்த சனிக்கிழமை முதல் கடும்மழை பெய்து வருகிறது. இந்த கடும்மழையால் 6 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக ஹெனான் மாகாணம் மிகவும் மோசமான பாதிப்புகளை சந்தித்துள்ளது. அந்த மாகாணத்தின் தலைநகர் ஜெங்சோவில் கடந்த சனிக்கிழமை இரவு 8 மணி முதல் நேற்று இரவு 8 மணி வரையில் 61.71 செ.மீ. மழை பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சீனாவில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக அளவில் மழை பெய்துள்ளதாக தெரிவித்த வானிலை அதிகாரிகள் மழை இன்னும் சில நாட்களுக்கு தொடரும் எனவும் எச்சரித்துள்ளனர்.

இந்த கடும் மழையின் காரணமாக தெற்கு சீனாவில் உள்ள ஆறுகள் மற்றும் ஏரிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

இதில் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. கரைபுரண்டோடும் வெள்ளத்தில் வீதிகள், பாலங்கள் மற்றும் ரயில் தண்டவாளங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் அங்குள்ள பல நகரங்களில்  வீதி மற்றும் ரயில் போக்குவரத்து முடங்கியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here