செல்போன் வெடித்து சிதறியதில் 8 மாத குழந்தை பலி

0
464

செல்போன் வெடித்து சிதறியதில் 8 மாத பெண் குழந்தை உயிரிழந்த சோக சம்பவம் இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

இந்தியாவிலுள்ள உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் அதிக நேரம் சார்ஜ் ஏற்றப்பட்ட செல்போன் வெடித்து சிதறியதில் 8 மாத பெண் குழந்தை பரிதாபமாக பலியாகியுள்ளது. பரேலி மாவட்டம் பச்சுமி கிராமத்தைச் சேர்ந்த சுனில்குமார் காஷ்யப், குசும் காஷ்யப் தம்பதியரின் 8 மாத பெண் குழந்தை கட்டிலில் படுத்து உறங்கி கொண்டிருந்த போது சுனில் சூரிய ஒளி மின்சாரம் மூலம் செல்போனுக்கு சார்ஜ் ஏற்றி உள்ளார். குழந்தை துாங்கி கொண்டிருந்த கட்டிலில் செல்போனை வைத்துவிடவே அனைவரும் அயர்ந்து துாங்கி கொண்டிருந்தனர்.

அப்போது செல்போன் திடீரென்று சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதனால் கட்டில் தீப்பற்றி ஏறிய தொடங்கியது. இதில் 30 சதவீத தீக்காயம் அடைந்த அந்த பச்சிளம் பெண் குழந்தை மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்டது. எனினும் படுகாயமடைந்த குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here