சைக்கிளில் செல்பவர்களுக்கு விஷேட வீதி ஒழுங்கை

0
271

சைக்கிள் செல்பவர்களின் நலன்கருதி கொழும்பு மாநகர சபை (CMC) கொழும்பின் சில பகுதிகளில் தனி சைக்கிள் பாதைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக சைக்கிள் பாவனையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஆகையால், கொழும்பில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு தனியான பாதைகளை அறிமுகப்படுத்துவதற்கு CMC நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.
அதற்கமைவாக , டச்சு வைத்தியசாலைக்கு அருகாமையிலும், ஜனாதிபதி மாவத்தைக்கு அருகில் உள்ள இலங்கை வங்கியிலும், கொழும்பு துறைமுகம் வரையிலான ஆர்மர் வீதியிலும் தனியான சைக்கிள் பாதைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

துவிச்சக்கர வண்டியில் பயணிப்பவர்கள் தமது துவிச்சக்கர வண்டிகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு விசேட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மேயர் சேனாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பின் ஏனைய பகுதிகளிலும் விரைவில் அதிகமான சைக்கிள் பாதைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக இதன்போது மேயர் மேலும் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here