சைவப்புலவர் – இளஞ்சைவப் புலவர் பரீட்சைகள்

0
378

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தினால் நடாத்தப்படும் 2022 ஆம் ஆண்டுக்கான சைவப்புலவர் மற்றும் இளஞ்சைவப்புலவர் பரீட்சைகள் எதிர்வரும் 15,16,17 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக அகில இலங்கை சைவப்புலவர் சங்கச் செயலாளர் சைவப்புலவர் செ.த.குமரன் அறிவித்துள்ளார்.

பரீட்சைக்கான பாடங்கள் 15ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கும் இலக்கணம் 16 ஆம் திகதி முற்பகல் 9 மணிக்கு இலக்கியம் பிற்பகல் 1 மணிக்கு உரைநடை 17ஆம் திகதி முற்பகல் 9 மணிக்கு சாத்திரம் பிற்பகல் 1 மணிக்கு வரலாறு பாடங்கள் என பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.

பரீட்சை யாழ்ப்பாணம் நாவலர் மகாவித்தியாலயம் மட்டக்களப்பு ஆனைப்பந்தி பெண்கள் மகா வித்தியாலயம் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி ஆகிய நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.

பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் தபால் மூலம் தனிப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பரீட்சார்த்தி பரீட்சை மண்டபத்தினை மாற்ற விரும்பின் எமக்கு உடனடியாக அறியத்தருவதுடன் பொருத்தமான பரீட்சை மண்டபத்தில் பரீட்சைக்கு தோற்ற முடியும்.மேலதிக விபரங்களை 0777197067, 0779773538, 0776132176 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here