ஜனநாயகத்திற்கு முரணாக எவராலும் செயற்பட அனுமதிக்க முடியாது

0
249

ஜனநாயகத்தை பாதுகாக்க சட்டம் முழுமையாக செயற்படுத்தப்படும். ஜனநாயகத்திற்கு முரணாக எவராலும் செயற்பட அனுமதிக்க முடியாது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பிரதமராக பதவி பிரமாணம் செய்து கொண்டதை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

சமூக கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு நட்பு நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் ஆதரவுடன் தீர்வு காண அரசாங்கம் உரிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. எரிபொருள், எரிவாயு ஆகிய சேவை கட்டமைப்பு சிறந்த முறையில் விநியோகிக்கப்படும்.
நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டால் சமூக கட்டமைப்பில் காணப்படும் ஏனைய பிரச்சினைகள் இயல்காகவே இல்லாமல் போகும்.

அரசியல் ரீதியில் மாறுப்பட்ட கொள்கை காணப்பட்டாலும்,நாட்டுக்காக ஒன்றிணைந்துள்ளோம்.நாட்டுக்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். ஜனநாயகத்தை உறுதிப்படுத்த சட்டத்தை முறையாக செயற்படுத்துவோம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here