ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பாதுகாப்புப் பிரிவின் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகவும் முப்படைகளின் தளபதியாகவும் பதவியேற்றதன் பின்னர் மரியாதை நிமித்தம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன, சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் என்.ஆர். லமாஹேவாகே, இலங்கை கடலோரப் பாதுகாப்புப் படையின் பணிப்பாளர் ஜெனரல் ரியர் அட்மிரல் அனுர ஏக்கநாயக்க ஆகியோர் ஜனாதிபதியை மரியாதை நிமித்தம் சந்தித்துள்ளதாகத் தெரிய வருகிறது
இந்தச் சந்திப்பின்போது ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசுகளையும் வழங்கி வைத்துள்ளனர்.
![](https://news-in-lanka-3.local/wp-content/uploads/2022/08/300393191_822750552466827_8269118908299498123_n.jpg)
![](https://news-in-lanka-3.local/wp-content/uploads/2022/08/300350944_822750625800153_162277711163303578_n-300x222.jpg)
![](https://news-in-lanka-3.local/wp-content/uploads/2022/08/300207993_822750125800203_3837973806551459135_n-300x178.jpg)
![](https://news-in-lanka-3.local/wp-content/uploads/2022/08/300390163_822750219133527_6817352572338838515_n-300x218.jpg)
![](https://news-in-lanka-3.local/wp-content/uploads/2022/08/300357545_822750452466837_1339767779924237743_n-300x241.jpg)