ஜனாதிபதியை சந்தித்தார் சமந்தா

0
183

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் (USAID) நிர்வாகி சமந்தா பவருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்குமிடையில். ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பின்போது இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இக்கலந்துரையாடலில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung), USAID திணைக்கள பிரதி பிரதம அதிகாரி சோனாலி கோர்டே (Sonali Korde) உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நேற்றையதினம் இலங்கை வந்தடைந்த அவர், ஜா எல பிரதேசத்திற்கு சென்று அங்குள்ள விவசாயிகளுடன் கலந்துரையாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here