தயிர் உட்கொண்ட அறுவர் வைத்தியசாலையில்

0
219

தயிர் உட்கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மஹதிவுல்வௌ மற்றும் ஹொரவ்பொத்தானை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை-ரொட்டவௌ பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 வயது 7 வயது மற்றும் 15 வயதுடைய சிறுவர்கள் வயிற்று வலி, வாந்தி பேதி காரணமாக மஹதிவுல்வௌ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதேவேளை தாய் மற்றும் இரு சிறார்கள் ஹொரவ்பொத்தானை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவருகிறது.

மாடு மேய்ச்சலில் ஈடுபட்டு வரும் குடும்ப உறுப்பினர் ஒருவர் பாலை தயிராக்கி உட்கொண்டதாகவும் இதனையடுத்து வயிற்றுவலி, வாந்தி பேதி ஏற்பட்டதாகவும் தெரிய வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here