கடந்த நவம்பர் மாதம் முதல் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்பட வேண்டிய திரிபோஷ இல்லை என சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார சேவைகள் பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் சித்ரமாலி டி சொய்சா தெரிவித்துள்ளார்.

சோள விளைச்சல் இல்லாமையே திரிபோஷா உற்பத்தி தடைப்படுவதற்கு முக்கிய காரணமாகும் எனவும்  எவ்வாறாயினும், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோஷ வழங்குவதற்கு வெளிநாட்டு நிறுவனங்களிடம் உதவி கோரப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் மேலும் தெரிவித்தார்.