நவம்பரில் உயர்தரப் பரீட்சை

0
269

2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த வருடம் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். உயர் தர பரீட்சைகள் கடந்த பெப்ரவரி 7ஆம் திகதியில் இருந்து மார்ச் மாதம் ஐந்தாம் திகதிவரை இடம்பெற்றது.

2 லட்சத்து 79 ஆயிரத்து 141 பாடசாலைப் பரீட்சார்த்திகளும் 66 ஆயிரத்து 101 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் பரீட்சைக்கு தோற்றியமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here