நாட்டின் உண்மையான நிலைமைய ஊடகத்தின் ஊடாக வெளிக்கொண்டு வாருங்கள் – பிரதமர்

0
293

சர்வதேச நாணய நிதியத்தின் குழாமினர் எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் என தெரிவிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போதுள்ள உணவுத் தட்டுப்பாடு காரணமாக, நாட்டில் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தைத் ஆரம்பிப்பது தொடர்பாகவும் விளக்கியுள்ளார்.

இலங்கையிலுள்ள ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

தற்போதைய நாட்டின் உண்மையான நிலைமைய ஊடகத்தின் ஊடாக வெளிக்கொண்டு வாருங்கள். ஊடகங்கள் அரசாங்கத்திற்கு பொறுப்புக் கூற வேண்டும் என்றும் அதேவேளை பொறுப்பான அறிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும்
அரசாங்கத்தின் முன்முயற்சிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள சேதத்தின் காரணமாக அதன் விளைவுகளை நாடு அனுபவிக்க வேண்டியிருக்கும்.

ஜப்பானின் நம்பிக்கையை மீட்பதற்கும் அவர்களின் ஆதரவைப் பெறுவதற்கும் ஜப்பானுடன் கலந்துரையாடல்கள் நடந்து வருவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

உணவு மற்றும் மருத்துவப் பொருட்களில் உதவி செய்வதில் நாடுகள் முன்னேறி வருவதாகவும், எனினும், எந்த நாடும் எரிபொருளை இலவசமாக வழங்க முன்வராது என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here