நாட்டை விட்டு வெளியேறிய துலாஞ்சலி குடும்பம்

0
189

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் சகோதரியான துலாஞ்சலி  பிரேமதாஸ தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தனது இரண்டு பிள்ளைகளுடன் நாட்டில் இருந்து புறப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டை எரித்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அண்மையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

சம்பவத்தின்போது அவர் அங்கு இருந்தார் என்று கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.

இதனையடுத்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here