நீண்டுச் செல்லும் சைக்கிள்களுக்கான வரிசை

0
197

இலங்கையில், ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் நெருக்கடியால் சைக்கிள்களை கொள்வனவு செய்வதற்காக பெருமளவிலான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரியவருகின்றது.

பெரும்பாலான மக்களும், பல்வேறு தொழில்களில் ஈடுபடும் மக்களும் தங்களது கடமைகள் மற்றும் இதர தேவைகளுக்காக ஈருளிகளையே தெரிவு செய்துள்ளதாகக் காணப்படுகின்றது.

தற்போது மருத்துவர்கள், வங்கி பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அரச பணியாளர்கள் சைக்கிள்களையே தமது பணிகளுக்கு உபயோகித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here