நீராடுவதற்காகச் சென்ற நால்வரில் இருவர் சடலங்களாக மீட்பு

0
299

வவுனியா ஈரப்பெரியகுளத்தில் நீராடுவதற்காக, சென்ற நால்வரில் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இன்று வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்த நால்வர் குளத்துக்கு நீராடச் சென்றுள்ளனர்.

இதன்போது,குளத்தில் நீராடிக் கொண்டிருந்த நால்வரில் இருவர் நீரில் மூழ்கியுள்ளனர்;. இதை அவதானித்த மற்றைய இருவரும் அவர்களை காப்பாற்ற முற்பட்டபோது அவர்களும் மூழ்கியுள்ளனர். இதையடுத்து அவர்கள் அழைத்துச் சென்ற வளர்ப்பு நாய் இருவரையும் காப்பாற்றி குளத்தின் கரைக்கு அழைத்து சென்றதாக அங்கிருந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

நீரில் மூழ்கிய இருவரையும் பொதுமக்களின் உதவியுடன் தேடுதல் மேற்கொண்ட பொலிசார், நீண்ட நேரத்தின் பின்னர் சடலங்களாகவே மீட்கப்பட்டுள்ளனர்.

15 வயதான நதீச விதுசர, 16 வயதான கைலாஸ் ஆகிய இருவருமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். சடலங்கள் உடற் கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஈரப்பெரியகுளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here