அம்பியூலன்ஸ் வண்டி விபத்து; மூவர் காயம்

0
417

கினிகத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் கண்டி பிரதான வீதியின் அம்பேவல பகுதியில் நோயாளர் காவு வண்டி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கினிகத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை 11மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கினிகத்தனை பாடசாலை ஒன்றில் காயமடைந்த பாடசாலை மாணவரொருவரை  கினிகத்தனை வைத்தியசாலையில் இருந்து நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

வண்டி வீதியினை வீட்டு விலகி குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் உத்தியோகத்தர்கள் இருவர் உட்பட மூவர் காயமடைந்துள்ளதாகவும் குறித்த பகுதியில் பெய்த கடும் மழையின் காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கும் பொலிஸார் மேலதி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here